ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
ஷங்கர் இயக்கிய ‛பாய்ஸ்' படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் பரத். தொடர்ந்து, ‛‛செல்லமே, காதல், பட்டியல், வெயில், என் மகன்'' போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவருக்கு, சமீபத்திய பல படங்களின் தோல்வியால் அவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தே காணப்படுகிறது. தற்போது பொட்டு, கடுகு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் பரத்.
இந்நிலையில் திடீரென வில்லனாக மாறியிருக்கிறார் பரத். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஏற்கனவே ஒரு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் நிலையில் இன்னொரு வில்லனாக பரத்தும் இணைந்துள்ளார். சமீபத்தில் முருகதாஸிடமிருந்து அழைப்பு வர உடனே ஐதராபாத் சென்றுள்ளார் பரத்.
அங்கு மகேஷ்பாபுவிற்கு வில்லனாக நடிப்பதும் பற்றியும், அவரின் ரோல் பற்றியும் தெரிவித்திருக்கிறார் முருகதாஸ். தனக்கான ரோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரோலாக இருப்பதால் வில்லன் வேடமாக இருந்தபோதிலும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் பரத். ஒருவாரத்திற்கு முன்னர் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சியிலும் பங்கேற்று விட்டு திரும்பியுள்ளார். மேலும் ஏற்கனவே 555 படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தானாக மாற்றிய பரத், இப்போது மகேஷ்பாபு படத்திற்காக மேலும் கட்டுமஸ்தாக மாற்றியிருக்கிறார்.