ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் பிரஜன். சசி இயக்கிய டிஷ்யூம் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி அதன் பிறகு சாட் பூட் த்ரி படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு தீ குளிக்கும் பச்சை மரம், சுற்றுலா, மணல்நகரம் படங்களில் நடித்தார். ஆனாலும் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இவருக்கு பிறகு சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், மா.பா.கா ஆனந்த் உள்ளிட்ட பலர் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார்கள். ஆனால் பிரஜன் அப்படியே இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த பழைய வண்ணாரப்பேட்டை படம் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து பிரஜன் கூறியதாவது: என் முதல் படம் சாட் பூட் த்ரீ அந்தப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து தீ குளிக்கும் பச்சைமரம் . அது மது அம்பாட் இயக்கிய படம். 2012ல் வெளியானது மார்ச்சுவரி,பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை. அந்தப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை.இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம். சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஈகோ தடுக்கும் என்ன செய்வது?.
இதற்கெல்லாம் முன்பு ஒப்பந்தமான படம்தான் பழைய வண்ணாரப்பேட்டை. படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது. 5 ஆண்டுகள் விட்டு, விட்டு படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும் . அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்தேன் தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது. இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு முடித்த படம்.
2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன்.நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்விராஜ், லால் படங்களும் அதில் அடங்கும். இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன், அதனால் மனதை திசை திரும்பவிடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு. டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத் தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும் .ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். எனது அடுத்த படம்குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இன்னொரு படம் மிரண்டவன் .அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத்தயாராக இருக்கிறது. தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் 2 வது நாயகனாக நடிக்கிறேன்.