தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் மெரீனா பீச்சில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் வடபழனியில் உள்ள நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரனின் ஒட்டலில் நினைவஞ்சலி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் சிவஸ்ரீ சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிககைகள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முக்கியமாக சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தான் கலந்து கொண்டார்கள். முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.