ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள ரசிகர்களுக்கு மோகன்லாலை எந்த அளவுக்கு தெரிந்திருக்குமோ அதே அளவு ஆண்டனி பெரும்பாவூர் என்பவரை பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். காரணம் மோகன்லாலின் வலது கையாக, அவரது தளபதியாக செயல்படுபவர்தான் இந்த ஆண்டனி. மோகன்லாலின் படங்களை தயாரிக்கும் ஆசீர்வாத் நிறுவனம் இவருடையதுதான். மோகன்லாலின் இன்னும் சில பிசினஸ்களை ஆண்டனிதான் மேற்பார்வை பார்த்து வருகிறார். இதற்குபின்னால் ஆண்டனியின் 28 வருட விசுவாசம் இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை..
கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த ஆண்டனி அடிப்படையில் ஒரு கார் ட்ரைவர். மோகன்லால் நடித்த பட்டினபிரவேசம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கார் ட்ரைவராக பணிபுரிய ஆள் வேண்டுமென அவரது நண்பர் ஒருவர் அவரை அனுப்பி வைத்தார். மோகன்லாலை பார்க்கலாம் என்கிற ஆசையில் அங்கே சென்றவருக்கும் மோகன்லாளுக்கே கார் ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. மோகன்லாலை தினசரி ஹோட்டலுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அழைத்துவரும் வேலையை செவ்வனே செய்தார். மொத்தம் 22 நாட்கள்.. ஷூட்டிங் கடைசி நாளன்று மோகன்லாலை பார்த்து, உங்களை மறுமுறை காணும் வாய்ப்பு வரும்போது என்னை ஞாபகம் வைத்திருப்பீர்களா என ஆண்டனி கேட்டாராம். நிச்சயமாக என்றாராம் மோகன்லால்.
மோகன்லாலுக்கு தான் கார் ஓடிய விபரத்தை நண்பர்களுக்கு ஆண்டனி சொல்ல, யாரும் நம்பவில்லையாம். சில மாதங்கள் கழித்து ஒருநாள் தங்கள் பகுதியில் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சென்றாராம் ஆண்டனி. படப்பிடிப்பு இடைவேளையில் ஷூட்டிங் பார்க்க வந்தவர்களை ஏதேச்சையாக பார்வையிட்ட மோகன்லால், கூட்டத்தில் நின்ற ஆண்டனியை கண்டதும் அவரை அருகில் அழைத்து அவர் கைகளை பற்றி நலம் விசாரித்தாராம்.. அப்போது பேச்சுவாக்கில் என்னிடம் கார் ட்ரைவராக சேர்ந்துகொள்கிறாயா என மோகன்லால் கேட்க, அன்றிலிருந்துதான் (1988) ஆண்டனியின் வாழ்வில் புதிய திருப்பம் தொடங்கியது.. இதோ இன்றுவரை மோகன்லாலின் ஆஸ்தான தளபதியாக செயல்பட்டு வருகிறார் ஆண்டனி பெரும்பாவூர்.