ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான்கு வருடங்களுக்கு முன்பு தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய ஆதாமிண்டே மகன் அபு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சலீம் அஹமது, தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றிய இந்தப்படத்தின் இயக்குனர் சலீம் அஹமது, அடுத்ததாக மம்முட்டியை வைத்து குஞ்சானந்தண்டே கதா என்கிற படத்தை இயக்கினார். படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதனால் அவரது அடுத்த படத்திலும் தானே நடிப்பதாக மம்முட்டியே கால்ஷீட் கொடுத்துவிட, இப்படித்தான் இவர்களது கூட்டணியில் பத்தேமாறி என்கிற படம் உருவானது.. விமர்சனம், வசூல் இரண்டுவிதமாகவும் வெற்றிப்படமாக அமைந்த இந்தப்படத்திற்கு மீண்டும் தேசியவிருதை பெற்றுத்தந்தார் சலீம் அஹமது.. இப்போது தனது படத்திற்கான கதையை தயார் செய்துவிட்ட சலீம் அஹமது, சினிமா பின்னணி கதைக்களத்தில் இந்தப்படத்தை இயக்கவிருபதாக அறிவித்துள்ளார். விரைவில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரத்தையும் வெளியிட உள்ளாராம்.