ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஷால் நடிக்கும் 'கத்திசண்டை' படம், சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன் கிட்டு', விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் 'சைத்தான்' ஆகிய படங்கள் இம்மாதம் ரிலீசாகவிருந்தன. குறிப்பாக கத்திசண்டை, சைத்தான் ஆகிய இரண்டு படங்களும் நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடல் இப்படங்களின் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
'சைத்தான்' டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கத்திசண்டை' படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன் கிட்டு' டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதை அப்படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பட வெளியீட்டை தற்போது தள்ளி வைப்பது பணத்தட்டுப்பாடு மட்டும் காரணமில்லை.
பொதுவாக சினிமா தயாரிப்பு வியாபாரம் அதிகபட்சமாக 20 சதவிகிதம் மட்டுமே கணக்கில் காட்டப்படுகின்றன. 80 சதவிகிதம் கணக்கில் வராமல் கறுப்பு பணமாகவே வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்சனையால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து எப்படி பணத்தை வசூலிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அதனால்தான் பட வெளியீட்டை தள்ளி வைத்து வருகின்றனர்.