‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கபாலி படத்திற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும் ரஜினியுடன் நடித்த பிறகே ரசிகர்களுக்கு அதிக பரிட்சயமான நடிகையாகியிருக்கிறார் தன்ஷிகா. அப்படத்திற்கு பிறகு காத்தாடி, ராணி, காலக்கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார் தன்ஷிகா. இந்த நிலையில், கலையரசன் நடிக்கும் ஒரு படத்திலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், சமுத்திரகனி இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்த கிட்ணா படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? என்பதை தன்ஷிகாவிடம் கேட்டபோது, கபாலி படத்துக்காக நான் எனது தலைமுடியை கத்தரித்துக்கொண்டேன். ரஜினி சாரின் படவாய்ப்பு கிடைப்பதே அரிது என்பதால் அந்த படத்தை விட மனமில்லாமல் முடியை கட் பண்ணினேன். அதுபற்றி கிட்ணா பட டைரக்டர் சமுத்திரகனியிடம் சொன்னபோது, அவரும் சம்மதம் கொடுத்தார். ஆக, கபாலியில் நடித்து படம் வெளியாகி பல மாதங்களானபோதும் எனது தலையில் இன்னும் எதிர்பார்த்தபடி முடி வளரவில்லை.
சமீபத்தில்கூட என்னை அழைத்து தலைமுடி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்தார் சமுத்திரகனி. அப்போது இன்னும் வளர வேண்டும் என்று சொன்னார். அதனால் தற்போது அப்பா படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் அவர், அந்த படத்தை முடித்த பிறகு கிட்ணாவை இயக்குவார் என்று தெரிகிறது என்கிறார் தன்ஷிகா