ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான இருக்கும் 'ஒப்பம்' படம் த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து இன்னொரு சாதனையை செய்துள்ளது... இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மோகன்லால். த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றி என சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாமல் தடுமாறி நின்ற வேளையில்தான் 'ஒப்பம்' அவரை தலைநிமிர செய்தது.. இன்னொரு பக்கம் இந்தியை சேர்த்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் ரைட்ஸுக்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது..
ரிலீஸாகி கிட்டத்தட்ட நாற்பதாவது நாளை தொட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் வசூல் சுமார் 50 கோடியை எட்டியுள்ளது.. இது தியேட்டர் வசூல் மட்டும் தானே தவிர, சாட்டிலைட் ரைட்ஸ் இதனுடன் சேர்க்கப்படவில்லை. அந்தவகையில் மலையாள சினிமாவில் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ள நான்கு படங்களில் த்ரிஷ்யம், ஒப்பம் என மோகன்லாலின் படங்கள் இரண்டு இடங்களை கைப்பற்றி உள்ளது.. இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்றால், அடுத்து புலி முருகன் படம் இந்த சாதனைகளையும் முறியடித்து நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.