ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா இடையில் படவாய்ப்புகள் இல்லாதததால் இருந்த இடம் தெரியாமல் இருந்தார். ஆனால் தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சடர்கனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் ஸ்ரேயாவின் பஸ்ட் லுக் அண்மையில் அவரது பிறந்த நாளில் வெளிவந்தது. பஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பில் நெகிழ்ந்துபோன ஸ்ரேயா, படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சரித்திரத் திரைப்படம் என்பதால் ஆடை அலங்காரம், செட் என சகலத்திலும் அதிக அக்கறை எடுத்து நேர்த்தியுடன் உருவாக்கி வரும் இயக்குனர் க்ரிஷ், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவின் நடவடிக்கை இயக்குனரின் கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் கடுப்பாகிப்போன கௌதமிபுத்ர சடர்கனி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஸ்ரேயாவை அழைத்து கண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இனிமேல் புகைப்படங்களை வெளியிடுவதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.