‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் - பாடகர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் இவர் எழுதி பாடிய நெருப்புடா பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது இவர், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார்.
ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் பலூன் திரைப்படத்தை 70 எம் எம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருகிறார்கள்.
"யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்.... அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் இந்த சிறப்பான கூட்டணியானது, விரைவில் இசை பிரியர்களை கவர உள்ளது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.