ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.. அடுத்தடுத்த வாய்ப்புகள் உடனே கதவை தட்டினாலும், அதன்பின்னர் மலையாள உலகத்தை உதறித்தள்ளிவிட்டு கௌதம் மேனன் அழைத்தார் என தமிழ் திரையுலகத்திற்கு ஓடி வந்தவர் ஆனால் காலம் இப்போது தனக்கு சரியான தண்டனையை கொடுத்திருப்பதாக தனக்கு நெருக்கமான மலையாள நடிகைகளிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம் மஞ்சிமா.. இவர் நடித்த முதல் படமாண ஒரு வடக்கன் செல்பி வெளியானபின் அதில் அவர் நடிப்பு பலராலும் விமர்சிக்கப்பட்டது.. அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என பலரும் கிண்டலடித்தார்கள்.
சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும், “அம்மா.. நீ எங்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் தயவு செய்து நடிப்பதை நிறுத்திவிடு” என அந்த சமயத்தில் தன்னை கலாய்த்தபோது ஏற்பட்ட வருத்தத்தை விட, இப்போது தான் தமிழில் நடித்துள்ள படம் ரெண்டு வருடமாக வெளியாகாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறாராம் மஞ்சிமா. சிம்புவுடன் ஜோடியாக நடிக்கிறேன் என பெருமிதத்துடன் இங்கே தமிழுக்கு வந்தவர், தனது சக மலையாள நடிகைகளிடம் தயவு செய்து சிம்பு படத்தில் ஒப்பந்தமாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள் என கூறி வருகிறாராம்.