மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி சமீபத்தில் வெளியானது. இதில் ரஜினி "காபாலின்னா பழைய படத்துல மீசை வச்சிக்கிட்டு கன்னத்துல மரு வச்சிக்கிட்டு நம்பியார் கபாலின்னு கூப்பிட்டா ஒடி வந்து என்னங்க எஜமான்னு சொல்வானே அந்த கபாலின்னு நினைச்சியாடா கபாலிடா" என்ற வசனத்தை பேசுவார். இது டீசரிலும் இடம் பெற்று அமோக வரவேற்பை பெற்றது.
இந்த வசனத்தை மலேசியாவைச் சேர்ந்த வித்யா என்ற ரசிகை கொஞ்சம் மாற்றி "பொண்டாட்டினா தளதளனு புடவையை கட்டிக்கொண்டு, தலை நிறைய பூ வச்சுக்கிட்டு, நெற்றி நிறைய பொட்டு வச்சுக்கிட்டு "ஏய் பொண்டாட்டி" என கூப்பிட்டால் குடுகுடுனு ஒடிவந்து காலை பிடித்துக் கொண்டு சொல்லுங்க அத்தான் அப்படினு கேட்பாளே அந்த மாதிரி பொண்டாட்டினு நினைச்சுயாடா! பொண்டாட்டிடா" என்று மாற்றிப் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டார் வித்யா.
இந்த வீடியோ வைரலாக பரவியது. இது ரஜினியின் பார்வைக்கும் சென்றபோது. அதை ரசித்த ரஜினி தன் ரசிகையை பார்க்க விரும்பினார். அந்த தகவல் வித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டதும் மலேசியாவிலிருந்து பறந்து வந்தார்.
தனுஷின் இல்லத்தில் அவர் ரஜினியை சந்தித்தார். அப்போது ரஜினி இந்த யோசனை உங்களுக்க எப்படி வந்தது. நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவரைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் கேட்டறிந்தார். பிறகு ரசிகையுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரஜினி&வித்யா சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. ஒரு சாதாரண வீடியோவால் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் மலேசியா கிளம்பினார் வித்யா.