ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படமான பாகுபலி. அதை யடுத்து மீண்டும் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து பாகுபலி-2 படவேலைகள் கடந்த பல மாதங்களாக ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டு வந்தது. தற்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டார் ராஜமவுலி. இதற்கடுத்து அனிமேஷன் வேலைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகுபலி-2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால், எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று கவனமாக செயல்படுகிறாராம் ராஜமவுலி. அதன்காரணமாக, அப்படத்திற்கு முதலில் ஒரேயொரு க்ளைமாக்ஸை மட்டுமே ரெடி பண்ணி வைத்திருந்தவர், இப்போது நான்கு விதமான க்ளைமாக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணி அதிலிருந்து இரண்டை தேர்வு செய்து அவற்றை படமாக்கி வருகிறாராம்.
அந்த இரண்டு க்ளைமாக்ஸையும் படமாக்கி, அதில் எது சிறப்பாக உள்ளதோ அதை படத்தில் இணைத்து வெளியிடப்போகிறாராம். ஒருவேளை படம் வெளியான பிறகு அந்த க்ளைமாக்ஸ்க்கு ரசிகர்கள்தரப்பில் இருந்து ஏதேனும் அதிருப்தி நிலவினால். கைவசம் இருக்கும் இன்னொரு க்ளைமாக்ஸை படத்தில் இணைக்கும் யோசனையும் உள்ளதாம். இப்படி இரண்டுவிதமான க்ளைமாக்ஸை எடுப்பதால் பாகுபலி-2 படத்தின் பட்ஜெட் கணிசமான அளவு உயர்ந்து விட்டதாம்.