ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹவ் ஓல்டு ஆர் யூ படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் பிசியான நடிகை யாகி விட்டவர் மஞ்சு வாரியர். அந்த படம்தான் தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் ரீமேக் ஆனது. மேலும், ரீ-என்ட்ரியில் மெச்சூரிட்டியான கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வரும் மஞ்சுவாரியர், இயற்கையை ரசிப்பதில் அலாதி பிரியம் கொண்டவராம். தான் படப்பிடிப்புகளுக்காக அவுட்டோர் செல்லும்போது, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தனது உதவியாளர்களுடன் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.
அதோடு, சிறு வயதில் தான் படித்த தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோயிலுக்கு இப்போதும் அவ்வப்போது செல்கிறாராம் மஞ்சுவாரியர். அங்குள்ள தனது உறவினர்களை சந்திக்க செல்லும் அவர், தான் சிறுவயதில் ரசித்த அங்குள்ள முக்கடல் சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அந்த பகுதிகளை மனமுருகி ரசிக்கிறாராம். அப்படி தன்னை அதிகமாக கவரும் பகுதிகளை பின்னர் தன்னை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களிடம் சொல்லி அந்த ஏரியாக்களில் படப்பிடிப்பு நடத்துமாறும் கேட்டுக்கொள்கிறாராம் மஞ்சுவாரியர்.