ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் தனித்தனி ஹீரோக்களாக நடித்துக்கொண்டு இருந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதும், நல்ல கதைகள் அமையும்போதும் பிருத்விராஜும், ஜெயசூர்யாவும் அவ்வப்போது இணைந்து நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி நிறைய படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் 'மும்பை போலீஸ்' 'அமர் அக்பர் அந்தோணி' படங்களில் நடிக்கும்போதுதான் பிருத்விராஜ், ஜெயசூர்யா இருவரும் நெருங்கிய நட்பாகினார். குறிப்பாக 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் நடிக்கும்போது இருவரும் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து வாரிவிடும் காட்சிகள் நிறைய இடம்பெற்றிருந்தன.
படத்தில் மட்டுமல்ல, நிஜத்தில் கூட ஜெயசூர்யா, பிருத்விராஜை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலாய்த்துக்கொண்டுதான் இருப்பாராம். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'விக்கி' என்கிற குறும்படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இயக்குனர் மனு ஆண்டனி, ஜெயசூர்யாவின் நண்பர். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட ஜெயசூர்யா, பிருத்விராஜிடம், “தயவுசெய்து இந்த இயக்குனரின் போன் நம்பரை மட்டும் என்னிடம் கேட்காதே.. எனது அடுத்த படத்திற்கு அவரை இயக்குனராக நான் ஏற்கனவே புக் பண்ணிவிட்டேன்” என்று காமெடியாக குறிப்பிட்டும் உள்ளார்.