‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். தற்போது அவர் தெருவோர சிறுவர்களுக்காக பல பணிகளைச் செய்து வருகிறார். 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற அமைப்பு தொடங்கி தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்காக பல பணிகளை செய்து வருகிறார்.
தற்போது 'அபயம் கேர் பார் சில்ட்ரன்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இதுவரை காணாமல் போன 8 மாத குழந்தை ரோகேஷ், 10 மாத குழந்தை சரண்யா, 3 வயது குழந்தை அஷ்வத் அகமத் ஆகியோரை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நாளை காலை 11 மணிக்கு காமராஜர் அரங்கில் நடத்துகிறார். இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார். ரஜினியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.