‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
‛குற்றம் கடிதல்' படத்தை இயக்கியவர் பிரம்மா. பள்ளி ஆசிரியை மாணவனுக்கிடையிலான பிரச்சினையை மையப்படுத்தி உருவான அப்படம் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதினை பெற்று, பிரம்மாவுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து இப்போது ஜோதிகா, லீடு ரோலில் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பிரம்மா. இந்த படத்தில் ஜோதிகா நடித்தபோதும், மாஜி ஹீரோயின்களான பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா, டெல்லி கணேஷ், நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் பெண்களுக்கான படமாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி டைரக்டர் பிரம்மா கூறுகையில், எனது புதிய படத்தில் ஜோதிகா, பானுப்பிரியா, ஊர்வசி சரண்யா மட்டுமின்றி, நாசர், டெல்லி கணேஷ், லிவிங்ஸ் டன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தை சமூகத்துக்கான கதையில்தான் உருவாக்கியிருக்கிறேன். ஆண்-பெண் இருவருக்குமான கதையில்தான் இந்த படம் உருவாகிறது. அதனால், ஜோதிகா நடிப்பதால் இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார் பிரம்மா.