‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய வைரமுத்து, நா.முத்துக்குமாரின் மறைவு வேதனை அளிப்பதாகவும், சிறந்த படைப்புக்களை தர வேண்டிய வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்தது தாங்க முடியாத துயராக இருப்பதாக கூறினார்.
காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார் என அறிஞர் அண்ணாதுரையுடன் பேசிக் கொண்டிருந்த வைரமுத்து கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து பேசிய அவர், மழை மட்டுமா அழகு...வெயில் கூட அழகு என எழுதிய முத்துக்குமார், வாழ்க்கை மட்டுமா அழகு மரணம் கூட அழகு தான் என சொல்வதை போல் படுத்து கிடக்கிறார். படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள். படைப்புகளை கவனிப்பதை போன்று உங்களின் உடல்நலத்தையும் பேண வேண்டும். தமிழுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் அவசியம். நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் படைப்பாளிகளின் கடைசி மரணமாக இருக்கட்டும். தமிழை விட்டு செல்பவர்களை தமிழர்கள் மறப்பதில்லை என தெரிவித்துள்ளார்.