‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான சண்டை கலைஞரான ராஜேந்திரன்தான் இப்போத ஆதிக படங்களில் நடிக்கும் நடிகர். ஒரே நேரத்தில் 30 படங்களில் நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் உண்மை.
நான் கடவுள் ராஜேந்திரன் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் யானை மேல் குதிரை சவாரி. அவருக்கு ஜோடியாக அர்சனா சிங் நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா சுவாமிநாதன், வழக்கு எண் முத்துராமன், தாரிக்கா உள்பட பலர் நடிக்கிறார்கள். கருப்பையா முருகன் இயக்குகிறார் இமாலயன் இசை அமைக்கிறார். மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
"உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. முடியாது என்று ஒதுங்கி இருப்பதை விட முயற்சித்து பார்த்து தோற்பதே மேல் என்கிற மேசேஜ் சொல்ற படம். யாராலும் முடியாது என்ற ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு வேலையை நான் கடவுள் ராஜேந்திரன் செய்து முடிப்பதுதான் கதை. யானை மீது குதிரை சவாரி செய்ய முடியாது. ஆனால் முயற்சித்தால் அதுவும் முடியும். எப்படி என்பது படத்தில் இருக்கிறது" என்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன்.
ஹீரோவாக நடிப்பது பற்றி நான் கடவுள் ராஜேந்திரன் கூறியதாவது: "யப்பா ஹீரோவெல்லாம் கிடையாதுப்பா எல்லா படத்துக்கும் பத்து நாள் வேலை செய்வேன். இதுல 30 நாள் வேலை செஞ்சிருக்கேன். நான்பாட்டுக்கு சண்டை போட்டோமோ பேட்டாவ வாங்கினோமான்னு இருந்தேன் இந்த பாலா தம்பி நடிக்க வச்சிருச்சி. இப்ப பாரு 60 வயசுக்கு மேல நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சாதிக்கிறதுக்கு வயசு முக்கியமில்லேன்னு சொல்வாங்கப்பா அதை நான் ஒத்துக்கிறேன்ப்பா. என்கிறார் ராஜேந்திரன்.