‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு நடிகர் ராணா தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாகுபலியில் வில்லான நடித்தார். ராணா நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணா நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கழுகு, சவாலே சமாளி, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கும் படத்தில்தான் ராணா நடிக்கிறார். தமிழில் மடை திறந்து என்ற தலைப்பிலும், தெலுங்கில் 1945 என்ற தலைப்பிலும் படம் தயாராகிறது. இது இரண்டு கால கட்டங்களில் நடிக்கிற கதை. கே புரொடக்ஷன் சார்பில் எஸ்.என்.ராஜன் தயாரிக்கிறார். ராணா ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், கருணாஸ், ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. கடந்த வாரம் கன்னட நடிகர் சுதீப் முடிஞ்சா இவன புடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோவானது குறிப்பிடத்தக்கது.