‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமலஹாசன் கடந்த மாதம் தனது அலுவலகத்தின் மாடிப்படியில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.தற்போது கமல் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார். அதோடு தனது வழக்கமான உடற்பயிற்சியையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
"அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட தையல் பிரிக்கப்பட்டுவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக காலை தாங்கியபடி நடந்து எனது உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று வருகிறேன். பிசியோதெரபி பயிற்சிகளை முழுமையாக செய்து வருகிறேன். நான் விரைவில் நலம் பெற வேண்டும என்று விரும்பி என்னோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார். செப்படம்பர் முதல் வாரத்திலிருந்து சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.