ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
நா.முத்துக்குமாரின் மறைவு குறித்து அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வேதனைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன் : எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் நா.முத்துக்குமார். ஆனந்தயாழை மீட்டியவர் இன்று அனைவரையும் சோகயாழை மீட்ட வைத்து விட்டு மறைந்து விட்டார். அவரது மறைவு தாங்கிக் கொள்ள முடியாதது. நல்ல கவிஞர்களை உருவாக்குவதும், அவர்களை ஊக்குவிப்பதுமே நா.முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
கமலஹாசன் (டுவிட்டர்) : நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நனலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி. தம்பி போன்ற ஒருவரை இழந்து விட்டேன்.
வைரமுத்து (அறிக்கை) : நா.முத்துகுமார் பெற வேண்டிய 3வது தேசிய விருதை காலம் களவாடிவிட்டது. நா.முத்துக்குமார் வாழ்ந்த பெருமையை அவரது பாடல்கள் பாடிக்கொண்டே இருக்கும்.
ஆர்.கே.செல்வமணி : காசால் வாங்க முடியாத கவிஞன் நா.முத்துக்குமார். காசால் வாங்க முடியாத கவிஞனை காலம் வாங்கிச் சென்றது வேதனை அளிக்கிறது. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று நா.முத்துக்குமாரின் பாடல்கள் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். தமிழ் உள்ளவரை இலக்கிய நயமிக்க பாடல்கள் இருந்து கொண்டே இருக்கும்.
நாசர் : நம்ப முடியாத நிகழ்வு. நடந்திருக்கக் கூடாத சம்பவம். மிகச் சிறந்த படைப்பாளி. அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.
சாகாவரம் பெற்ற கவிஞன் - பார்த்திபன் : ஒரு பாதி கதவை மட்டுமே திறந்து வாழ்வை பார்த்த நல்முத்து குமார் மறுபாதிக்குள் நம்மை கண்ணீர் சிந்த விட்டு மறைந்தது வேதனையே! சென்ற மாதம் " எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க ? நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே?" என்று உரிமையாய் கேட்டார். இன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து படுக்க செல்கையில் ... உறங்கி எழுந்ததும் பாடலின் சூழலை அவரிடம் சொல்லி எழுத சொல்ல வேண்டும் என நினைத்தபடியே... Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி... அங்கு அவருடைய எண்ணே இல்லை. அதெப்படி? நாங்கள் தான் அடிக்கடி பேசுவோமே என்று குழம்பியபடி மீண்டும் தேடினேன் . Kavingar na. Muthukumar என்ற contact-டில் அவர் எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்"not reachable" என்றது. சற்று நேரங்கழித்து முயல முடிவு செய்து வந்துள்ள whats app செய்திகளை படித்தேன். நண்பர் சுரேஷ் சந்திரா அனுப்பிய மரணச் செய்தியில் மவுனத்தேன். நண்பனை இழந்த வருத்தத்தை பாதியாக குறைத்துக் கொள்ள காரணம்... சாகாவரம் பெற்ற கவிஞனாக அவரின் எழுத்தும், வரிகளும், படைப்புகளும் நம்மிடம் இருப்பது.
நடிகர் விஜய், ஜெயம் ரவி, இயக்குனர் வசந்த், இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் பாக்கியராஜ், இயக்குனர் சசிகுமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மா.கம்யூ., ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் தனுஷ், சரத்குமார், சித்தார்த், அதர்வா,விஷால், நடிகைகள் ராதிகா, தமன்னா, சமந்தா, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோர் டுவிட்டரில் தங்களின் இரங்கலையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.