‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கார்த்திக் சுப்புராஜின் உதவியாளராக பீட்சா படத்தில் பணியாற்றிய ஏ.ராகவேந்திரா பிரசாத் இயக்கி இருக்கும் படம் 54321. கார்த்திக் சுப்புராஜிடம் பணியாற்றி இருந்தாலும் அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உருவாக்கி இருக்கிறார். ஷபீர், அர்வின் ஹீரோக்களாக நடித்துள்ளனர். பவித்ரா ஹிரோயின். இவர்களுடன் ரவி ராகவேந்திரா ஜெயகுமார் பசங்க சிவகுமார், ரவி வெங்கட்ராமன் நடித்துள்ளனர். ரோகினி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மெயின்ஸ்ட்ரீம் புரொடக்ஷன் சார்பில் ஜி.வி.கண்ணன் தயாரித்துள்ளார். பானு முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார்.
"54321 என்ற தலைப்பு வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்திருக்கிறோம். 5 மனிதர்களின் வாழ்க்கையும், 4 விதமான வாழ்க்கை முறையும், 3 கொலைகளும், 2 மணிநேரத்தில் நடக்கிறது இதற்கு காரணம் 1 பழிவாங்கல். இப்படி எல்லாமே தலைப்புக்குள் வந்து விடும். சின்ன மெசேஜோடு யதார்த்தமான ஒரு உளவியல் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. கதையும், திரைக்கதையும் நிச்சயமாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்" என்கிறார் இயக்குனர் ராக«வ்நதிர பிரசாத்.