‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாடலாசிரியர், எழுத்தாளர் கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாடலாசிரியர் ஸ்நேகன் : நா.முத்துக்குமார் மிகவும் எளிமையானவர். குழந்தைகளிடமும், குடும்பத்திடமும் மிகவும் பாசம் கொண்டவர். அவரை காலம் இவ்வளவு சீக்கிரம் அழைத்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கங்கை அமரன் : முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.
இயக்குனர் விக்ரமன் : முத்துக்குமாரின் மறைவு எழுத்துலகிற்கு மிகப் பெரிய இழப்பு.
மதன் கார்க்கி : பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் முத்துக்குமார்.
இயக்குனர் வெற்றிமாறன் : முத்துக்குமார் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். உதவி இயக்குநர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர்.
இயக்குனர் சமுத்திரக்கனி : சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இயக்குனர் சீமான் : மிகச் சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர். அறிவுமதியின் அரவணைப்பில் நாங்கள் அனைவரும் இருந்து வந்தோம். இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் இருந்த கவிதை ஆற்றலை பார்த்து நான் தான் கவிஞராக அறிமுகம் செய்தேன். மரணச் செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. மதிப்பு மிக்க பேரறிஞரை இழந்து விட்டது பேரதிர்ச்சியாக, பேரிழப்பாக உள்ளது.
நடிகர் தனுஷ் : அவரின் இறப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன்
நடிகர் சிவகார்த்திகேயன் : மிக பெரிய இழப்பு. அவரை இந்த திரையுலகம் இழந்துவிட்டது
நடிகை தமன்னா : அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன்
நடிகை ஸ்ரீதிவ்யா : இந்த சிறிய வயதில் அவர் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன்.