‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் படம் இயக்காமல் நேரடியாக கன்னடத்தில் படம் இயக்க சென்றார். அங்கு அவர் நடிகர் சுதீப்பை கொண்டு ‛முடிஞ்சா இவன புடி' என்ற படத்தை இயக்கினார். கன்னடம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் ஒரேநேரத்தில் இப்படம் தயாராகி உள்ளது. சுதீப் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆக்ஷ்ன் கம் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து படம் இந்தவாரம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தான் முடிஞ்சா இவன புடி படத்தின் தயாரிப்பாளர். ஏற்கனவே லிங்கா நஷ்ட பிரச்னை தமிழகத்தில் சில இடங்களில் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தச்சூழலில் லிங்கா படத்தை காரணம் காட்டி விநியோகஸ்தர்கள் சில முடிஞ்சா இவன புடி படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி முடிஞ்சா இவன புடி படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.