‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் கண்ணா, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ரோகித் தாவன் இயக்கத்தில் வெளிவந்த ‛டிஸ்யும்' படத்தில் நடித்திருந்தார். அவருடன் ஜான் ஆபிரஹாம், வருண் தவான் போன்றவர்களும் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு டிஸ்யும் படத்தில் நடித்தது ஏன்? என கூறியுள்ளார் அக்ஷ்ய் கண்ணா.
அதில், ‛‛டிஸ்யும் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் எனக்கான ரோல் மிகவும் வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தில் நடித்தேன். என்னுடைய மூன்று நான்கு படங்களுக்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி விழுந்திருப்பது உண்மை தான். சின்ன சின்ன வேடங்கள் வந்ததால் நடிக்கவில்லை, இனி தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.