‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் அடிக்கடி ஒரு 'டிரென்ட்' வரும் போகும். அந்த டிரென்டில் சிலர் சில காலம் பயணிப்பார்கள். ஆனால், அந்த டிரென்ட் அனைவருக்குமே கை கூடாது. சிலரை மட்டும் மேலே தூக்கி விடும், சிலரை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். அப்படி ஒரு 'டிரென்ட்' ஆக ஹீரோக்கள் 'திருநங்கை' கதாபாத்திரங்களிலும் அல்லது 'பெண்' கதாபாத்திரத்திலும் நடிப்பது ஆரம்பமாகிறதோ என ஒரு சந்தேகம் வருகிறது.
கமல்ஹாசன் நடித்த 'அவ்வை சண்முகி' படம் மாதிரி ஒரு சில படங்கள் மட்டுமே வர முடியும். அதற்கு அதிகமான மெனக்கெடல் வேண்டும், கதைகள் அமைய வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அமீர் இயக்கிய 'ஆதி பகவன்' படத்தில் ஜெயம் ரவி இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரமாக 'திருநங்கை' கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படத்தின் கதை படு சொதப்பலாக அமைந்ததால், அவருடைய நடிப்பும் எடுபடாமல் போனது.
இப்போது 'அவ்வை சண்முகி' மாதிரியான ஒரு பாத்திரத்தில் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 'ஆதி பகவன்' படத்தில் ஜெயம் ரவி நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் 'இருமுகன்' படத்தில் விக்ரம் நடிக்கிறார் என அந்தப் படம் ஆரம்பமான போதே பேசப்பட்டது. ஆனால், அதை படம் சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்யவில்லை. ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ள 'இரு முகன்' படத்தின் டிரைலரைப் பற்றிய சிறிய கண்ணோட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில், 'நைல் பாலீஷ் அணிந்த விரல்கள், அதில் மோதிரங்கள், பெண்கள் அணியும் செருப்பு' ஆகியவற்றுடன் முகமூடி அணிந்து விக்ரம் (?) இருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அது உண்மைதானா என்பது ஆகஸ்ட் 2ம் தேதி தெரிந்துவிடும்.