ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பல பெரிய படங்களை தயாரித்து வந்தவர், திடீரென இரண்டு மாதங்களுக்கு முன்னர் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதேசமயம் மதன் மீது பணமோசடி தொடர்பாக நிறைய புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மதனை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தவழக்கில் சில வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தது போலீஸ். அந்த அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதியிடம் போலீஸ் தரப்பில், மதனை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர் உயிரோடு தான் இருக்கிறார். கிட்டத்தட்ட அவரை நெருங்கிவிட்டோம். மேலும் ஒருமாதம் அவகாசம் வேண்டும் என்று கூறினர். இதையடுத்து நீதிபதியும், 4 வாரம் காலஅவகாசம் வழங்கினார். அதோடு, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், இனியும் கால அவகாசம் கேட்க கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.