பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' வரும் ஜூலை-22ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் அதை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.. வழக்கம்போல கட் அவுட், தோரணங்கள் பட்டாசுகள் என கலைகட்டினாலும் கூட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.. இங்கே நம்மவர்கள் இப்படி கொண்டாட்டத்திற்கு தயாராக, கேரளாவில் உள்ள மலையாள நடிகர்களின் ரசிகர்களும், நம் தமிழ் நடிகர்களுக்கு அங்குள்ள ரசிகர்களும் இணைந்து 'கபாலி' மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவ முயற்சி எடுத்துள்ளார்கள்.
'கபாலி' கேரளாவில் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.. இதில் தலசேரி என்கிற ஊரில் ரஜினி, மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ், விஜய், சூர்யா, துல்கர் சல்மான், ஜெயசூர்யா என மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் 'கபாலி' படத்தின் சிறப்பு காட்சியை பொறுப்பேற்று நடத்த இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து தலசேரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் அங்கே படிக்கும் மாணவர்களுக்கும் தேவையான உபகரணங்கள், நோட்டு, பாடப்புத்தகங்கள் என வாங்கி கொடுக்க இருக்கிறார்களாம். ரசிகன் என்றால் காசை வீணாக்குபவன் அல்ல, நல்ல காரியங்களுக்காக செலவு செய்பவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த திட்டம் என்கிறார்களாம் ரசிகர்கள் அனைவரும்.