‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒன்னிரண்டு படங்களில் வில்லனாக நடித்ததும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது வில்லன் நடிகர்களுக்கு. பிரகாஷ்ராஜ் போன்ற சீனியர் வில்லன்கள் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாவதில்லை. எனவே தமிழ்சினிமாவில் வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனாலோ என்னவோ வேறு வழியே இல்லாமல், மும்பை சென்று பாலிவுட் படங்களில் தலைகாட்டியவர்களை வில்லனாக நடிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இயக்குநர்கள்.
மாடலாக இருந்து, 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'பியார் மே கபி கபி' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் தருண் அரோரா. அதன் பிறகு ஏழெட்டு பாலிவுட் படங்களில் நடித்த தருண், 'கணிதன்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இப்படத்தில் அதர்வா உடன் மோதும் வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்திலும் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் தருண் அரோரா. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தை சுராஜ் இயக்குகிறார்.