‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு போட்டியாக நடித்து நடிகையர் திலகம் என்று பெயர் எடுத்தவர் சாவித்ரி. 20 ஆண்டுகள் சினிமாவில் தனிப்பெரும் சக்தியாக கோலோச்சியவர். இந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த முதல் நடிகை. நடித்த படங்கள் 318. முதன் முதலாக கார் வாங்கிய நடிகை. வீட்டுக்குள் நீச்சல்குளம் அமைத்த நடிகை. இப்படி சினிமாவில் ராணியாக இருந்த சாவித்திரியின் சொந்த வாழ்க்கை சோகமானது. ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்ட சாவித்ரி, அதில் கருத்து வேறுபாடு, சொந்த படம் எடுத்து பொருளாதார இழப்பு என்று அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்து, தன் கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி இறந்தார்.
சிகரம் தொட்டு பின்பு பாதாளத்தில் விழுந்த சாவித்ரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு மொழியில் சினிமாவாகிறது. மகாநதி என்பது படத்தின் தலைப்பு. அஸ்வின் என்பவர் இயக்குகிறார். சாவித்ரியின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசி. அவர் சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படித்து அதன் பிறகே திரைக்கதை எழுதியுள்ளாராம் இயக்குனர்.
இது அவரை பெருமைப்படுத்தும் படமாக, அவரைப் பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் படமாக இருக்கும். சாவித்ரியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார்கள்.
சாவித்ரியின் வாழ்க்கைப் படம் என்றால் அதில் ஜெமினி கணேசன் இல்லாமல் எடுக்க முடியாது. சாவித்ரி குடும்பமோ, ஜெமினி கணேசன் குடும்பமோ இதற்கு அனுமதி அளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள்.