மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'கதம் கதம்' உட்பட படங்களில் நடித்த 'நட்டி' என்கிற ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிகராக க்ளிக்காவில்லை. 'சதுரங்கவேட்டை' என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகே, அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த கதாநாயகனாக உயர்ந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நட்டிக்கு பல இயக்குநர்கள் கதை சொல்ல முன் வந்தனர். அவரோ புலி படத்தின் ஒளிப்பதிவாளராக பிசியாகிவிட்டார்.
புலி வெளியான பிறகு, 'எங்கிட்ட மோதாதே' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தை ராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார். 'எங்கிட்ட மோதாதே' படத்தை அடுத்து 'வாடா மவனே' என்ற படத்தில் நடிக்கிறார் நட்டி. இப்படத்துக்கு பேரரசு கதை, திரைக்கதை, வசனம் எழுதுமகிறார். இப்படத்தை 'மகராணி கோட்டை' என்ற படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு கே.ஆர்.கவின் இசை அமைக்கிறார். இவர் கவிஞர் பிறை சூடனின் மகன்.