ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா விஷால் வைத்து இயக்கியுள்ள படம் மருது. தேனி மாவட்ட மண்வாசனைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலுடன் ஸ்ரீதிவ்யா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தலின்போது இரு அணிகளாக எதிரும் புதிருமாக செயல்பட்ட விஷால்-ராதாரவி இருவரும் இந்த படத்தில் நடித்ததை அடுத்து அண்ணன்-தம்பியாகி விட்டார்கள். அதோடு, ராதாரவி மரியாதைக்குரியவர் என்றும் கூறி வருகிறார் விஷால்.
மேலும், கிராமத்து செண்டிமென்ட் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராதாரவிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். இப்படம் மே 20-ந்தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது தமிழில் அதே தேதியில் வெளியானபோதும், தெலுங்கில் தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளதாம். காரணம், மகேஷ்பாபு நடித்துள்ள பிரமோற்சவம படம் மே 20ல் வெளியாவதால் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து அதாவது மே 28-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளார் விஷால்