தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்று முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ.13 கோடி நிதிதிரட்டினர். அதுமட்டுமல்லாது, நடிகர் சங்கத்திற்கு பல பிரபலங்கள் தாங்களாகவே முன்வந்து சில உதவிகள் செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் ஐசரி கணேஷ். நடிகர் சங்கத்தில் அமைய இருக்கும் கட்டடத்தில் தன் சொந்த செலவில் சுமார் 350 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தை கட்டித்தருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் நிதியை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று(மே 14ம் தேதி) வழங்கினார்.
ஐசரின் கணேஷின் தந்தையும், முன்னாள் நடிகருமான ஐசரி வேலனின் 29வது நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னை நடிகர் சங்க வளாகத்தில், ஐசரின் வேலனின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நலித்த கலைஞர்களுக்கு வேலை மற்றும் வேஷ்டிகளை ஐசரி கணேஷ் வழங்கினார். அத்துடன் நடிகர் சங்கத்தில் தன்னுடைய செலவில் அமைய இருக்கும் திருமண மண்டபத்திற்கு, முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியையும் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார் ஐசரி கணேஷ்.
இந்த நிகழ்ச்சியில் நாசர் பேசும்போது... மிகவும் எளிய மனிதர், சிறந்த மனிதர் ஐசரி வேலன். நடிகர் சங்க கட்டடம் கட்டும் அவர் கண்ட கனவை இன்று நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். நடிகர் சங்க வளாகத்தில் ஐசரி வேலனின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது சங்கத்திற்கு கிடைத்த பெருமை. நடிகர் சங்க வளர்ச்சியில் கணேஷின் பங்கு அதிகம். 117 குழந்தைகளின் கல்வி செலவை அவர் ஏற்றுள்ளார் என்றார்.
கார்த்தி பேசும்போது, நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்தும் திட்டத்தை கமல் துவக்கி வைத்தார். இரண்டாவதாக ஐசரி கணேஷ் நடத்தியுள்ளார். சங்கத்தில் உறுப்பினராக உள்ள 70 வயது ஆன கலைஞர்களுக்கும் பென்சன் வழங்க முடிவு செய்துள்ளோம். மூன்றாண்டுகளுக்குள் சங்க கட்டடத்தை கட்டி முடித்துவிடுவோம் என்றார்.