இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஓட்டளிக்க ஏதுவாக மே 16ம் தேதி பகல்நேர காட்சிகளான காலை மற்றும் நண்பகல் காட்சியை ரத்து செய்வதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மாலை மற்றும் இரவுநேரக்காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.