‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'இன்னும் எத்தனை நாட்களுக்கு தான், துக்கடா வேடங்களில் நடித்து காலத்தை ஓட்டுவது. எதிர்கால சினிமா வரலாற்றில் நம் பெயரும் இடம்பெற வேண்டாமா' என, விரக்தியில் இருந்த பார்வதி நாயரை நோக்கி, தற்போது அதிர்ஷ்டதேவதையின் பார்வை திரும்பி உள்ளது. நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம், என்னை அறிந்தால் போன்ற படங்களில், சிறிய வேடங்களில் நடித்து வந்த பார்வதி, தற்போது, பிறைதேடிய நாட்கள், என்கிட்ட மோதாதே ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே, சிறிய பட்ஜெட்டில் தயாராகுபவை. இரண்டாம் வரிசை நடிகர்கள் தான் ஹீரோக்கள். ஆனாலும், இந்த படங்களின் வெற்றி, தன்னை கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் பார்வதி.