ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் 151 நாட்களும் தமிழ்நாட்டில் சுமார் 259 நாட்களும் ஓடி அதன்பின் மீண்டும் கூட ரிலீஸ் செய்யப்பட்டு சில நாட்கள் ஓடிய படம் தான் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய 'பிரேமம்'.. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் பாராட்டிய இந்த 'பிரேமம்' படத்திற்கு எந்த பிரிவிலும் விருது கொடுக்கப்படவில்லை.. மேலும் 'நேரம்' படத்தை இயக்கியவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தப்படம் சிறுபிள்ளைத்தனமாக எடுக்கப்பட்ட படம் என்பதால் தான் விருதுபெரும் தகுதியை இழந்தது என்றும் அந்த சமயத்தில் அப்போது கூறியிருந்தார் ஜூரிகளில் ஒருவரான மோகன்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில் அவரது கருத்துக்கு தனது முகநூலில் பாராட்டு தெரிவிப்பது போல கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.. அதில், “தாங்கள் எனது படத்துக்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கொடுக்காததற்கு நன்றி. சொல்லப்போனால் அடுத்துவரும் எனது படங்களுக்கும் நீங்கள் விருதுகொடுக்காமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். உங்களை போன்றவர்களுக்கு சினிமா என்பது குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அளவுகோலாக இருக்கும். துரதிர்ஷ்டாவசமாக 'பிரேமம்' படம் அந்த அளவுகோலுக்குள் அடங்காமால் போய்விட்டது. நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட பார்முலாவுக்குள் என்னாலும் படம் எடுக்க முடியாது. இந்த பதிலை கூட நான் உடனே கூறாமல் ஒருமாதம் கழித்து கூறுவது ஏனென்றால் அப்போதே பதில் சொல்லியிருந்தால் உங்கள் கூற்றுதான் உண்மை என்பது போல ஆகிவிடும் என்பதால் தான்” என இப்படி கிண்டலாகவே நீள்கிறது அல்போன்ஸின் மறுமொழி பதிவு.