Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கலாபவன் மணிக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்: வினயன் சாடல்..!

16 மார், 2016 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Director-Vinayan-slams-Malayalm-celebrities

நிச்சயமாக மறுப்பதற்கில்லை.. மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணிக்கு ஒரு நடிகன் அல்லது ஒரு ஹீரோ என்கிற அந்தஸ்தை கொடுத்தவர் யாரென்றால் அது சாட்சாத் மலையாள இயக்குனர் வினயன் என்பதை சூடம் ஏற்றாமலேயே சத்தியம் செய்து சொல்லலாம். துண்டு துக்கடா வேடங்களில் கூட தனது திறமையை வெளிப்படுத்திய கலாபவன் மணியிடம் ஏதோ ஒரு ஸ்பார்க் இருப்பதை கண்டறிந்த இயக்குனர் வினயன் தான் அவரை முதன்முதலில் 'வசந்தியும் லட்சுமிக்குட்டியும் பின்னே ஞானும்' என்கிற படத்தில் கதையின் நாயகனாக்கினார். அன்றுமுதல் சுக்கிரதசைக்கு மாறிய கலாபவன் மணியின் திரை வாழ்க்கை உச்சத்திற்கு போக ஆரம்பித்தது. அடுத்தடுத்து கலாபவன் மணியை வைத்து 13 படங்களை இயக்கினார் வினயன்.


இது அனைத்தும் பலருக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் அதை கலாபவன் மணி இறந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இப்போது சொல்வதற்கு காரணம் இருக்கிறது. நேற்று முன் தினம் கலாபவன் மணிக்காக மலையாள நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றதில்லையா..? அதில் கலந்துகொள்ள கலாபவன் மணியின் குருநாதரான இந்த இயக்குனர் வினயனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அனுப்பியிருக்கலாம் தான். ஆனால் நடிகர்கள் மட்டுமே பங்கெடுக்கலாம் என நினைத்தார்களோ என்னவோ அழைக்காமல் விட்டுவிட்டார்கள்.


இதுதான் வினயனை கொந்தளிக்க வைத்துவிட்டது. “மற்ற யாரையும் விட கலாபவன் மணியின் சுக துக்கங்களை நன்கு அறிந்தவன் நான். அங்கே கலந்துகொண்டு கலாபவன் மணி என் உடன்பிறவா சகோதரன் என அவருக்காக போலியாக கண்ணீர் வடித்தவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரை தீண்டத்தகாதவராக தூரத்திலேயே நிற்க வைத்தவர்கள் தான். அப்படிப்பட்டவர்கள் என்னை அழைக்காததே நல்லது. மணியுடன் 13 படங்களில் இணைந்து பணியாற்றிய எனக்கு மற்றவர்களை விட, ஞாபகம் வைத்துக்கொள்ள நிறைய நினைவுகள் உள்ளன. அதை பறைசாற்ற மேடை வேண்டும் என அவசியம் எதுவும் இல்லை” என நடிகர் சங்கத்தை வறுத்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வினயன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in