‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நேற்று தமிழில் விஜய்சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான 'காதலும் கடந்து போகும்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன், பார்த்துவிட்டு அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாதபடி ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வரை ஒருவார்த்தை கூட தமிழில் சரியாக பேசத்தெரியாத மடோனாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் பேச தடுமாறியபோது நலன் குமாரசாமி, விஜய்சேதுபதி இருவரும் தான் உதவிக்கரம் நீட்டினார்களாம்.
ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைத்ததுமே ஒப்புக்கொள்ள காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். ஆம்.. தனக்கு நினைவு தெரிந்தநாளில் இருந்து எப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கேட்க ஆரம்பித்தாரோ, அப்போதிருந்தே அவருக்கு தமிழ் மேல காதல் ஏற்பட்டுவிட்டதாம். சொல்லப்போனால் தமிழின் மீதுள்ள காதல் தான் தன்னை தமிழ்ப்படத்தில் நடிக்க அழைக்க வந்தது என்கிறார். இன்னொரு காரணம் மடோனா நடிப்பை விட பாடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறவர். ஒரு சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்ததாம். இப்போதும் இருக்கிறதாம். கிட்டத்தட்ட 5௦ நாட்கள் சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட மடோனா, தமிழ்சினிமா தனக்கு புது அனுபவத்தை தந்துள்ளது என்கிறார்.