‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாய்கள் ஜாக்கிரதை சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள படம் மிருதன். வருகிற 19-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் லட்சுமிமேனன் நாயகியாக நடித்திருக்கிறார். வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கும் லட்சுமிமேனன், இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்த அனுபவங்களை வண்டி வண்டியாய் கொட்டி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மிருதன் படத்தின் ப்ரமோஷனுக்காக வந்திருந்த அவரிடம், ஸ்ருதிஹாசன் மாதிரி கணீர் குரலை வைத்திருப்பவர்களே, டப்பிங் பேசும்போது, அழகான குரல் வளமுள்ள நீங்கள் டப்பிங் பேசாமல் இருப்ப தேன்? என்று மீடியாக்கள் கேட்டபோது, ஆடிப்போய் விட்டார் லட்சுமிமேனன். ஸ்ருதிஹாசனை சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்டதால், நோ கமெண்ட்ஸ் இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று நழுவினார். அதோடு, எனக்கு டப்பிங் பேச ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் டைரக்டர்கள் வாய்ப்பளிக்கவில்லை. மேலும், எனக்கு இப்போது டப்பிங் பேசுபவர்களே நன்றாகத்தான் பேசுகிறார்கள். அது எனக்கு திருப்தியாகவே உள்ளது என்றார் லட்சுமிமேனன்.