‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள படம் ஜில் ஜங் ஜக். தீரஜ் வைத்தி என்ற குறும்பட டைரக்டர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, எனது 42 வருட சினிமா பயணத்தில் இந்த மாதிரி ஒரு வேடத்தில் இதுவரை நடித்ததில்லை. அப்படியொரு மாறுபட்ட வேடம் இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த படத்தில் உங்களுக்கு ஒரு வேசம் இருக்குன்னு சித்தார்த் சொன்னார். உடனே ஒத்துக்கொண்டேன். இந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளமே வேண்டாம் என்றேன். ஆனால் சித்தார்த் கொடுத்து விட்டார். ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்றால், டைரக்டரோ, நடிகரோ தயாரிக்கிற படமாக இருந்தால் வருடம் ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடிப்பதை நான் தொடர்ந்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான வேடம் என்பதோடு, தாடி வைத்த கெட்டப்பில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் வீரர் ஒருவர் வைத்துள்ள தாடிதான் அது. அதை புதிய யுக்தியில் படமாக்கியிருக்கிறார்கள். கேமரா ஆங்கில் வைத்த விதமே புதுமையாக இருந்தது. படத்தின் டெக்னீசியன்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், அவர்கள் படமாக்கிய விதம் பிரமிப்பாக இருந்தது.
அதேபோல் சித்தார்த்தும் திறமையானவர். அவர் ஏற்கனவே மணிரத்னத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதால் டைரக்ஷன் நாலேஜூம் அவருக்கு அதிகமாக உள்ளது. அந்த வகையில், இந்த புதிய டீமை அவர் அற்புதமாக வேலை வாங்கினார். நான்கூட சித்தார்த்தை தெலுங்குகாரரோ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் அவருடன் நடித்த பிறகுதான் அவர் தமிழ்க்காரர் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும், நான் சில விசயங்களை ஓப்பனாக பேசுவதைப்பார்த்து என்னை திமிர் பிடித்தவர் என்கிறார்கள். ஆனால் அது திமிறு அல்ல தன்னம்பிக்கை. எம்மேல எனக்கு இருக்குற நம்பிக்கையில் மனதில் பட்டதை ஓப்பனாக பேசுபவன் நான்.
முக்கியமாக, இந்த படத்தில் கதாநாயகி இல்லை. அந்த குறை இல்லாத அளவுக்கு படம் ஜாலியான கதையில் உருவாகியிருக்கிறது. அதோடு, கதாநாயகி இருந்தால் அரைகுறை ஆடையில் மேடையேறுவார்கள். கால்மேல் கால்போட்டு உட்காருவார்கள். அதை போட்டோகிராபர்கள் படம் பிடித்து பத்திரிகையில் போடுவார்கள். அதைப்பார்த்து எங்களை ஆபாசமாக பத்திரிகையில் போட்டு விட்டதாக அவர்கள் வழக்குப்போடுவார்கள். இந்த படத்தில் அந்த தொல்லை எதுவும் இல்லை. ரொம்ப சந்தோசம்.
அதோடு நான் இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இதற்கு காரணம் மீடியாக்கள்தான். நான் இங்கே பேசிக்கொண்டிருப்பதை உடனே இணைய தளங்களில் போட்டு விடுகிறார்கள். அதை வெளிநாட்டில் இருப்பவர்களும் பார்க்கிறார்கள். அப்படியொரு பெரிய பப்ளிசிட்டியை எனக்கு மீடியாக்கள் கொடுத்து வருகின்றன. இந்த படத்தில் நான் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் காரணம். சித்தார்த் ஒரு நல்ல நடிகர் என்பதோட நல்ல மனிதர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்றை உதவிகளை செய்து வருகிறார். இப்படியொரு நல்ல மனிதரின் படத்தில் நானும் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். சுனாமி வந்தபோது நான் கன்னியாகுமரியில் இருந்தேன். அப்போதுகூட அசரவில்லை. ஆனால் இந்த வெள்ளத்தின்போது ஷேக்காகி விட்டேன். ஆனால் சித்தார்த் போன்றோர் இறங்கி உதவி செய்தனர். பாராட்ட வேண்டிய விசயம்.
மேலும், இதுவரை நடித்த படங்களில் இல்லாத ராதாரவியை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் நான் ஒரு வசனம் பேசியிருந்தேன். அதையே பாடலாக்கி விட்டனர். பத்திரிகைகளில் என்னைப்பற்றி கிசுகிசு எழுதும்போது, கரகரத்த குரலுக்கு சொந்தக்காரர் என்றுதான் எழுதுவார்கள். எங்கள் குடும்பத்தின் குரலே அப்படி. ஆனால் அப்படிப்பட்ட என்னையே இந்த படத்தில் வசன நடையில் பாட வைத்து விட்டனர். அந்த அளவுக்கு இந்த படமே ஒரு வித்தியாசமான முயற்சி. தூங்ககூட விடமாட்டார்கள். அப்படி வேண்டும் இப்படி வேண்டும என்று நடிப்பை கறந்து விடுவார்கள். அதனால் ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார் ராதாரவி.