ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான 'அரண்மனை 2' படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதால் படத்திற்குக் கூட்டம் வருவதாகச் சொல்கிறார்கள். இதனிடையே படத்தைப் பார்த்த சித்தார்த், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாததைக் கண்டு கடும் கோபமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனால்தான் டிவிட்டரில் கூட அவர் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் 'நாகூர் பிரியாணி, உளுந்தூர்பேட்டை தெரு நாய்' வசனத்தைப் போட்டிருந்தார் என்கிறார்கள். அது தனுஷையோ, ரஜினியையோ குறிப்பிடுவதில்லையாம், சுந்தர்.சியைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் கதாநாயகியைக் காப்பாற்றுபவர்தான் கதாநாயகனாக கருதப்படுவார். ஆனால், இந்தப் படத்தில் பேய் பிடித்த த்ரிஷாவை அவருடைய காதலன் சித்தார்த் காப்பாற்றாமல் த்ரிஷாவின் அண்ணனாக நடித்திருக்கும் சுந்தர்.சி தான் காப்பாற்றுவார்.
முதலில் சொன்ன கதையை மாற்றி தனக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் சுந்தர்.சி படத்தை மாற்றி விட்டார் என்பதுதான் சித்தார்த்தின் குற்றச்சாட்டாம். ஆனால், படம் வெற்றி பெற்றதும் தன் எண்ணத்தை சித்தார்த் மாற்றிக் கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் சுந்தர்.சியுடன் கொண்டாடியிருக்கிறார் சித்தார்த்.
ஓ..இதுக்குப் பேருதான் 'ஜில் ஜங் ஜக்'கா....!