குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தமிழில் இன்னமும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். வெளிவந்த 'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அந்த இரண்டு படங்களையும் அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், சாதாரண ரசிகர்களை அந்தப் படங்கள் சென்றடையவில்லை. அதனால் சுந்தர் .சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். சுந்தர் .சி - சித்தார்த் முதன் முறை கூட்டணி அமைத்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெற்றிப் படமாக அமைந்ததே அதற்குக் காரணம்.
அதனால், மீண்டும் 'அரண்மனை 2' படம் தன்னை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என்று சித்தார்த் நம்பிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் சொந்தமாகத் தயாரித்து நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' படத்தின் வெளியீட்டைக் கூட இந்தப் படத்திற்குப் பிறகு வெளியிடலாம் எனத் தள்ளி வைத்துவிட்டார். 'அரண்மனை 2' படம் வெற்றி பெற்றால் 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கும் பேருதவியாக இருக்கும் என்பது அவர் கணிப்பு. 'காதலில் சொதப்புதுவது எப்படி' படத்திற்குப் பிறகு சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ள சித்தார்த் 'அரண்மனை 2, ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்கள் தமிழில் தன்னைக் கரை சேர்க்கும் என்று திடமாக நம்புகிறார்.