ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விறுவிறுப்பான ஆக்சன், மீடியமான ரொமான்ஸ், கொஞ்சம் காமெடி, என கலந்துகட்டி படங்களை தந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் சல்மான்கான் சமீபத்தில் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, ஏதேச்சையாக தனது படங்களை டிவியில் பார்த்தால், பார்த்தபடியே கொஞ்ச நேரத்த்தில் அப்படியே உறங்கிவிடுவாராம். ஆனால் மற்ற நடிகர்களின் படம் என்றால் கொஞ்ச நேரம் கூட அசராமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். இதை சொன்னதற்காக தன்னை யாராவது அடிக்க வந்தாலும் வரலாம் என அவரே முன்னெச்சரிகையாக ஒரு விளக்கத்தையும் சொல்லிவிட்டார்.