தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாரை தப்பட்டை வாய்ப்பு, நீங்களாக தேடிப் போனதா இல்லை உங்களை தேடி வந்ததா?
பாலா சார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை, ஒரு பரிசாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கும் என, நினைத்து கூட பார்க்கவில்லை, நான் இயக்கும், நடிக்கும், தயாரிக்கும் அனைத்து படங்களையும், பாலா சாருக்கு போட்டு காட்டுவேன். இந்த படத்தில் நடிக்கும்படி, அவர் கூறியபோது, ரொம்ப சந்தோஷப்பட்டேன். சேது படத்தில் அவரிடம், உதவி இயக்குனராக வேலை பார்த்த நான், இப்போது அவர் இயக்கத்தில் நடித்துள்ளது, கூடுதல் மகிழ்ச்சி.
இந்த படத்தில் கரகாட்டம் கலைஞராக நடித்துள்ளீர்கள்; இதற்காக பயிற்சி பெற்றீர்களா?
படத்தில் நடிப்பது குறித்த பேச்சு துவங்கியபோதே, 'டான்ஸ் ஆடணும், நாதஸ்வரம் இசைக்க பயிற்சி எடுக்கணும்' என, பாலா சார், முன்பே கூறிவிட்டார். அதற்கு ஏற்றபடி முழுமையாக பயிற்சி எடுத்த பிறகே நடித்தேன். மறக்க முடியாத அனுபவம்.
இந்த படத்தின் கரு என்ன?
கரகாட்ட கலைஞனின் வாழ்க்கையை பேசும் படம். அவர்கள் சந்தோஷம், துயரம், காதல், எல்லாவற்றையும் பேசக்கூடிய படமாக இது இருக்கும்.
நிஜமான கரகாட்ட கலைஞர்களுடன் ஆடும் போது எப்படி உணர்ந்தீர்கள்?
அவர்கள் எல்லாம், பல ஆண்டுகளாக இதற்கான பயிற்சி பெற்று, பல இடங்களில் ஆடியவர்கள். அவர்களுடன் ஆடும்போது, பயமும், பதற்றமும் இருந்தது. ஆனால், அவர்களே, இப்படி ஆடுங்க, இங்க இதை செய்யுங்கள் என கூறி உதவியதால், எனக்கு கொஞ்சம் சுலபமாக இருந்தது. இயக்குனரின் ஒத்துழைப்பு இங்கே அதிகமா இருந்தது.
மீண்டும் சமுத்திரகனியுடன் இணைகிறீர்களாமே..