Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் அமைதியான பெண் - கதகளி கண்ணழகி கேத்ரின் தெரஸா!

14 ஜன, 2016 - 06:56 IST
எழுத்தின் அளவு:
i-like-chennai:katherine-theresa
Advertisement

சர்க்கரை கடலின் அலைகளில், அசைந்து வந்த அக்கரை தேசத்து கரும்புக்கட்டு, பசுமைப் புரட்சியில் பளிச்சென வளர்ந்த, மலர்ந்தும் மலராத மஞ்சள் மலர் மொட்டு, அதகளம் செய்யும் அழகாலே இளைஞர்களின் இதயங்களில் தினமும் நடக்குது ஜல்லிக்கட்டு. பிறந்தது துபாயாக இருந்தாலும் மெட்ராஸ் தான் இவருக்கு அட்ரஸ். கவிதைப் பொங்கலாய் கதகளி ஆடும் கண்ணாலே திரையை திருவிழாவாக்கி ஆர்ப்பரிக்கும் அழகிய புயல், நடிகை கேத்ரின் தெரஸா. தினமலர்-க்கு அளித்த பேட்டி...

* இந்த புத்தாண்டு துவக்கம் உங்களுக்கு எப்படி இருந்தது?


நான், கேரள வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். அதனால், அப்பா, அம்மா மற்றும் தோழிகளுடன், துபாயில் புத்தாண்டை அமர்க்களமாக கொண்டாடினேன்.


* துபாயில் பிறந்த நீங்கள் இந்தியாவை பற்றி...?


துபாயை விட இந்தியாவில் பல சிறப்புக்கள் இருப்பதாக உணர்கிறேன். என் தோழிகளை பார்க்க எப்போதாவது துபாய் செல்வேன். மற்றபடி இந்தியா தான் என் தாய்வீடு.


* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்...?


கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இன்று என் ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியாக நடிக்கிறேன்.


* மெட்ராஸ் படத்திற்கு பின் இடைவெளி...?


இல்லை, தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். கதகளிக்கு பின் கணிதன், வீரதீரசூரன் என, வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இனி இடைவெளிக்கு இடமே இருக்காது.


* உங்கள் பொழுதுபோக்கு...?


பொழுதுபோக்கிற்கு நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பேன், டிவி பார்ப்பேன். 6 மாதத்திற்கு ஒரு முறை சமையலறை பக்கம் சென்று, சமைக்க முயற்சிப்பேன். அவ்வளவு தான்.


* சமையலில் ஆர்வம் உண்டா?


ஆறு மாதத்துக்கு ஒருமுறை தான், கிச்சன் பக்கமே எட்டிப் பார்ப்பேன். எனக்கு என்ன தெரியுமோ, அதை சமைப்பேன். அன்றைக்கு வீட்டுக்கு வரும் தோழிகளுக்கு, நான் சமைத்த உணவை, கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து விடுவேன். பாவம் அவர்கள்.


* கதகளி படத்தில் உங்கள் கேரக்டர் ?


மீனு குட்டி என்ற கேரக்டரில் மெடிக்கலில் வேலை செய்யும் குறும்புக்கார பெண்ணாக நடித்திருக்கிறேன்.


* விஷாலுடன் ஜோடியாக...?


விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறேன். நல்ல உழைப்பாளி, படப்பிடிப்பிற்கு நேரம் தவறாமல் தினமும் ஆஜர் ஆகிவிடுவார், நல்ல நடிகர்.


* கிளாமராக நடிப்பீர்களா.?


என் வேலையே நடிப்பது தானே. இயக்குநர் சொல்வதை கேட்டு அப்படியே செய்கிறேன். ஒரே மாதிரி ரோல் நடிப்பது எனக்கும் போர் அடிக்கும், என்னை பார்க்கும் ரசிகர்களுக்கும் போர் அடிக்கும். அதனால் முடிந்தவரை என் ஒவ்வொரு படத்திற்கும் சிறிய அளவில் வித்யாசமாய் நடிக்க முயல்கிறேன்.


* சென்னையில் குடியேறும் திட்டம் உள்ளதா?


இப்போதைக்கு இல்லை. என் அம்மா, துபாயில் இருக்கிறார். அப்பா, படப்பிடிப்புகளுக்கு எனக்கு உதவியாக வருகிறார். இப்போதைக்கு ஐதராபாத்தில் தான் வசிக்கிறேன்.


* மறக்க முடியாத கதகளி அனுபவம்...?


ஒரு நாள் படப்பிடிப்பின் போது 5 காஸ்ட்டியூம்கள் மாற்றி நடித்தது சவாலாக இருந்தது. கடலூரில் செயற்கை மழை வரவழைத்து படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் அன்று இரவு நிஜ மழையே வந்துவிட்டது. இக்காட்சிகள் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.


* ஹீரோயின்களில் நம்பர்-1, 2 போன்றவற்றில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா.?


எனக்கு இந்த வரிசைகள் பற்றியெல்லாம் கவலை, நான் என் படங்களின் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். இது தான் என் லட்சியம்.


* பார்பதற்கு அமைதியா தெரியுறீங்களே.?


நிஜத்திலும் நான் அப்படித்தான். அவ்வளவாக நான் பழக மாட்டேன், அமைதியான பெண்.


* இந்த பொங்கல் பண்டிகை எப்படி?


இந்த பொங்கலை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடப் போகிறேன். கதகளி படத்தை, முதல் நாள், முதல் காட்சி, ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கப் போகிறேன். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.


* தமிழ் ரசிகர்கள் பற்றி...?


இந்த ஆண்டு வெளியாகும் என் படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். ரசிகர்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கிறேன், அவர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in