ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூரி, பொன்ராம் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ரஜினி முருகன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். தடைகள் பல கடந்து இப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் பற்றி இதில் ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
ரஜினி முருகன் ரிலீஸ் தாமதமானதில் வருத்தம் உண்டா.?
ரஜினி முருகன் படம் தாமதமா ரிலீஸ் ஆனதில் எனக்கு வருத்தம் இல்லை. எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்.
ரஜினி முருகன் பற்றி சொல்லுங்க..?
படத்தில் என் அப்பாவும், சிவகார்த்திகேயன் அப்பாவும் நண்பர்கள். என் பேர் கார்த்திகா தேவி. என்னை கேடி என்று கூப்பிடுவார்கள். காலேஜ் முடித்து, வேலை தேடும் பெண்ணாக படத்தில் வர்றேன். கதை மதுரையை பின்னணியாக கொண்டு நகரும். படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். காமெடி, ஆக்ஷன் எல்லாமே இருக்கு.
சிவகார்த்திகேயன் பற்றி சொல்லுங்க.?
சிவா, எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசுவார். நல்லா இருந்தா நல்லா இருக்குனு சொல்வார் நல்லா இல்லைனா, இல்லைனு சொல்லிடுவார். எனக்கு சூட்டிங்கில் ரொம்ப உதவியா இருந்தார்.
ராஜ்கிரண் பற்றி சொல்லுங்க.?
ராஜ்கிரண் சாருடன் எனக்கு அவ்வளவாக சீன் இல்லை. செட்டில் பார்த்து கொள்வோம். அவருடன் படத்தில் நானும் இருந்தது எனக்கு சந்தோஷம். சிறுவயது முதல் அவர் நடிப்பை, ரசித்து இருக்கேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நீங்கள் எப்படி..?
படப்பிடிப்பே கலகலப்பா தான் இருக்கும் சிவா, சூரி அண்ணா, இயக்குநர் எல்லாரும் சேர்ந்தா அவ்ளோ தான் அந்த இடமே அதகளமாகிடும். எனக்கு தமிழ் பேச தெரிந்ததால், திருப்பி கலாய்ச்சி விட்டுறவேன்.
சினிமாவில் அம்மா சொல்லிக் கொடுத்த டிப்ஸ் என்ன.?
அம்மா நான் முதன் முதலில் மலையாளப் பட சூட்டிங் போகும் போது, நேரத்தை சரியாக கடைபிடிக்கணும், செட்ல யாராக இருந்தாலும், ஒரே மாதிரி மரியாதையுடன் பழகவேண்டும் என்று சொன்னாங்க. அதன்பிறகு எதிலும் தலையிட மாட்டாங்க. நான்தான் கதை கேட்கிறேன். எதும் தேவைப்படும்போது, அவர்களிடம் டிஸ்கஸ் பண்ணுவேன்.
நீங்கள் கால்ஷீட் சொதப்பியதாக ஒரு செய்தி.?
நான் கால்ஷூட் சொதப்பவில்லை. ரஜினிமுருகன் படத்தில் நடிக்கும் போது, தெலுங்கில் 2, 3 படங்கள் நடித்து வந்தேன். மணிசார் படம், கவலை வேண்டாம் போன்ற படங்கள் பேச்சு வார்த்தையில் தான் இருந்தன. ஆனால் செய்திகள் நிறைய ஏதேதோ வந்தன. இந்த மாதிரி எல்லாம் ஆகிடக்கூடாது என்பதால் தான், நிறைய படங்களை ஒத்துக் கொள்ளவில்லை.
உங்களது அடுத்தடுத்த படங்கள் பற்றி..?
தமிழில் அடுத்து பாம்பு சட்டை, தனுஷூடன் ஒரு படம் முடித்து விட்டேன். அடுத்து, சிவகார்த்தியுடன் ஒரு படம் நடிக்கிறேன். ரொம்ப ரிலாக்ஸ் ஆகவே படம் நடிக்கிறேன்.
தமிழ் சினிமாவில் நல்ல படியாக, நல்ல இடத்திற்கு வர முயற்சி செய்கிறேன். சென்னையில் பொங்கல் கொண்டாடப் போகிறேன். பட ரிலீஸ் அன்று, முதல் ஷோ பார்க்க போறேன். ரசிகர்கள் எப்போதும் போல் எனக்கு சப்போர்ட் பண்ணனும்.