ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
பீப் பாடல் விவகாரத்தில் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அறிவித்த சிம்பு, போலீசாரின் சம்மனை ஏற்காமல் நீதிமன்றத்தில் மனுவுக்கு மேல் மனு தாக்கல் செய்து தொடர்ந்து தப்பித்து வருகிறார். நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் வழக்கிற்கு தடைவிதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது.
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்று பால் முகவர்கள் தொடர்ந்த வழக்கு. இதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். போடப்பட்ட வழக்குகளில் இது முக்கியமானது. எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சிம்பு மனு தாக்கல் செய்தார். "ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனவே மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிம்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு தொடர்ந்துள்ள வழக்கிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அதோடு வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பின்னர் வழக்கை வருகிற 22ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த தீர்ப்பு சிம்புவின் சட்டரீதியான நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.