ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்துள்ளார். அவரது 1000மாவது படம் தாரை தப்பட்டை. இளையராஜாவின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில் அவரது இசை வடிவங்களை ஓவியமாக 50 ஓவியர்கள் வரைந்து வருகிறார்கள்.
ஓவியர் சந்துரு தலைமையில் இந்தப் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஒருங்கிணைக்க ஓவியர் சந்த்ருவுடன் நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், ஒவியர் நடராஜ், எழுத்தாளர் கவுதம் சன்னா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணி பற்றி குழுவினர் கூறியதாவது: ரஷியாவைச் சேர்ந்த ஓவியார் கன்டன்ஸ்கி என்பவர் 1911ம் ஆண்டு முதன் முறையாக இசையை ஓவியமாக வரைந்தார். பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது. ஐரோப்பிய நாடுகளில் இது மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவில் செவ்வியல் இசை பண்கள் சிலவற்றை ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்திருந்தாலும் இந்தியாவில் அவ்வளவாக பரவவில்லை.
40 ஆண்டுகளாக தமிழர்களை இசையால் தாலாட்டி வரும் இளையராவின் இசை வடிவங்களை ஓவியமாக்கி அவரை கவுரப்படுத்தவே இந்த முயற்சி. தற்போது 50 ஓவியர்கள் இதனை வரைந்து வருகிறார்கள். வருகிற 31ந் தேதி காலை 10 மணி முதல், ம-றுநாள் மாலை 6 மணி வரை இந்த -ஓவியங்கள் பெசன்ட் நகர் பேஸ் வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. என்றார்கள்.