ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், நாசர் நடித்து தெலுங்கில் ஹிட்டான பலுப்பு படத்தை தமிழில், எவன்டா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். செல்வந்தன், புரூஸ் லீ 2, படங்களை வெளியிட்ட பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இதனையும் வெளியிடுகிறார்.
கோபி சந்த் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார், வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் பாடல்களை அருண் பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம் எழுதி உள்ளனர். தமிழ் வசனங்களை ஏஆர்கே.ராஜராஜா எழுதியுள்ளார்.
திருமணமே வேண்டாம் என்று திரியும் மகனுக்காக பல பெண்களை பார்த்து பலுப்பு வாங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்படி அவர் பார்க்கும் பெண்கள்தான் அஞ்சலி, ராய் லட்சுமி. மூன்றாவதாக ஸ்ருதி ஹாசனை பிடிக்கிறார். அவர் ஒரு வில்லங்க பார்ட்டி, அவரால் ஒரு பிரச்சினை அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ரவிதேஜாவுக்கும் வருகிறது. அது என்ன பிரச்சினை, அதை எப்படி சமாளித்தார்கள். ரவிதேஜா யாரை திருமணம் செய்கிறார் என்கிற கதை. காமெடி. ஆக்ஷன், 3 ஹீரோயின்களின் கிளாமர் என கலர்புல் மசாலா படம்.