ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், நாசர் நடித்து தெலுங்கில் ஹிட்டான பலுப்பு படத்தை தமிழில், எவன்டா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். செல்வந்தன், புரூஸ் லீ 2, படங்களை வெளியிட்ட பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இதனையும் வெளியிடுகிறார்.
கோபி சந்த் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார், வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் பாடல்களை அருண் பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம் எழுதி உள்ளனர். தமிழ் வசனங்களை ஏஆர்கே.ராஜராஜா எழுதியுள்ளார்.
திருமணமே வேண்டாம் என்று திரியும் மகனுக்காக பல பெண்களை பார்த்து பலுப்பு வாங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்படி அவர் பார்க்கும் பெண்கள்தான் அஞ்சலி, ராய் லட்சுமி. மூன்றாவதாக ஸ்ருதி ஹாசனை பிடிக்கிறார். அவர் ஒரு வில்லங்க பார்ட்டி, அவரால் ஒரு பிரச்சினை அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ரவிதேஜாவுக்கும் வருகிறது. அது என்ன பிரச்சினை, அதை எப்படி சமாளித்தார்கள். ரவிதேஜா யாரை திருமணம் செய்கிறார் என்கிற கதை. காமெடி. ஆக்ஷன், 3 ஹீரோயின்களின் கிளாமர் என கலர்புல் மசாலா படம்.